Monday, February 26, 2018

மாற்றுப்பயணம்

தமிழகத்தில் இன்று பலரின் கருத்து நாட்டின் அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பது தான். அக்கருத்தினால் ஒரு மிக பெரிய குழப்பம் நிலவி வருகின்றது, அதன் காரணம் தலைமையேற்று நடத்தும் ஆற்றல் இல்லாத தலைவர்களை தேர்ந்தெடுத்த மக்கள். 

மாற்றம் ஒன்று தான் மாறாதது ஆனால் அம்மாற்றம் எதில் வேண்டும் - நாட்டின் அரசியலில்லா அல்லது அரசியல்வாதிகளில்லா அல்லது அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் மக்களின் எண்ணஓட்டத்தில்லா. இப்படி அம்மாற்றத்திற்கு பல பரிமாணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதில் நாம் புரிந்துக்கொள்ளவேண்டிய ஒன்று என்னவென்றால் மக்களாட்சி அரசியல் கட்டமைப்பில் நாட்டின் தலைமைத்துவம் என்பது அந்நாட்டின் மக்களையே ப்ரதிபலிக்கின்றது என்பதையே. 

மாற்றம் எண்ணத்தில் மட்டுமில்லாமல் செயலிலும் வேண்டும் இல்லையேல் நாற்றமும் ஏமாற்றமும் தான் முடிவு என்பதை உணர்வோம்... வாக்களிப்போம்... புதிய தமிழகத்தை உருவாக்குவோம்...

No comments:

Post a Comment