எங்கே சென்று கொண்டிருக்கின்றது நமது சமூகம். அனைவரும் ஒருவிதமான அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றோம். சமூகம் என்பது சமூகவலைத்தளமாகிவிட்டது, கருத்துச்சுதந்திரம் சிதைந்துபோய்விட்டது. சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு அனைவரும் பொங்கியெழுகின்றார்கள் சமூகவலைத்தளங்களில் - சமூகத்தில் அல்ல. அனைத்திற்கும் அனைவரும் கருத்துகளை சரமாரியாக பரிமாறிக்கொள்கிறோம், மறுநிமிடமே அக்கருத்திற்கு எவ்வளவு கமெண்டுகளும், லைக்ஸ்களும் வரும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றோம். அனைத்து நிகழ்வுகளுக்கும் அனைவரும் கருத்து சொல்லவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நமது சமூகத்திற்கு விஷமானது. ஒரு பிரச்சனை என்றால் ஒரு காரணமும் ஒரு விளைவும் கண்டிப்பாக இருக்கும், அதேபோல் அப்பிரச்னைக்கு தீர்வே இறுதியானது கருத்துக்கள் இல்லை என்ற புரிதல் நமக்கு அவசியமானது.
No comments:
Post a Comment