என்றைக்கு தமிழர்கள் நடிகர்களை நடிகர்களாக பார்க்கிறார்களோ அன்றைக்கு தான் தமிழகத்திற்கு வெளிச்சம். அதற்காக நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறு என்று கூறவில்லை, இந்தியா ஜனநாயக நாடு எனவே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் நல்ல குடிமகன்களாக இருக்க வேண்டுமேதவிர நல்ல நடிகர்களாக அல்ல. மக்கள் நடிகர்களை கொண்டாடுவதை தவிர்த்தாலே போதும் அவர்கள் அவர்களுடைய வேலையை பார்த்துவிட்டு செல்வார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து பொழுது இருந்த நிலை வேறு இன்றைக்கு இருக்கும் நிலை வேறு. அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தங்களுடைய கருத்தை எளிதில் எடுத்துச்செல்லவும் புரியவைப்பதற்கும் சினிமாவை ஒரு சாதனமாக பயன்படுத்தினார்கள், இதை மக்கள் அன்றைக்கே புரிந்துகொண்டிருந்தார்கள் என்றால் தமிழகத்திற்கு நல்ல தலைவர்களை உருவாகியிருக்க முடியும். நம்முடைய முன்றைய தலைமுறை தமிழகத்தில் நல்ல நடிகர்களை உருவாக்கியதன் விளைவை நாம் இன்று அனுபவித்து கொண்டிருக்கின்றோம். ஒரு தலைவனின் பேச்சாற்றலில் மயங்காமல் அவனிடம் நல்ல செயலாற்றல் இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும். பேச்சுத்திறனை விட செயல்திறன் மிகவும் முக்கியம். முன்றைய தலைமுறை செய்த தவரை நாம் மறுபடியும் செய்ய வேண்டாம்.
No comments:
Post a Comment