நம்மிடையே பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது அதாவது திருமண வாழ்வில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக சம்பாதிக்கவேண்டும் என்பது. இக்கருத்தையுடையவர்கள் முட்டாள்தனத்தின் உச்சத்தை ப்ரதிபலிக்கின்றவர்களாவார்கள். ஏனென்றால் இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் மனித இனம் மட்டும் தான் இப்படி ஒரு முட்டாள்தனமான கருத்தையுடைவர்கள். நம் சமூகத்தில் என்றைக்கு ஆணும் பெண்ணும் சமம் என்ற ஒன்று சொல்லில்மட்டுமில்லாமல் மக்களின் எண்ணஓட்டத்திலும் செயலிலும் ப்ரதிபலிக்கின்றதோ அன்றைக்குத்தான் நாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லமுடியும் நாம் முன்னேறிவிட்டோமென்று.
திருமணத்திற்கு ஒழுக்கத்தை பாருங்கள் பணப்புழக்கத்தை அல்ல !!! ஒருவனிடம் ஒழுக்கம் இருந்தால் வாழ்க்கையை நடத்துவதற்கான பணப்புழக்கமும் வாழ்க்கையில் உயர்வும் தானாக வந்தடையும்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்".
இக்கருத்தை என்னுளே இருந்து வெளிப்படுத்தியத்திற்கு காரணமாக இருந்த மூடர்களாக இருக்கும் என் குடும்பமக்களுக்கு (அனைவரும் அல்ல சிலர் மட்டுமே) மிக்கநன்றி. புரிந்தவர்களுக்கு பிடிக்காவிட்டால் தயவு செய்து நீங்களே என்னை உங்கள் முகநூலில் இருந்து நட்பழி செய்துவிடுங்கள்.
No comments:
Post a Comment