தமிழகத்தில் திராவிட அரசியலின் பெரும் சாதனை மக்களிடம் சாதி & மொழி பிரிவினை உண்டாக்கியது மற்றும் பகுத்தறிவை வளர்க்கிறோம் என்ற பெயரில் தமிழர்களை மூடர்களாகியது. என்றைக்கு சாதி என்ற பிணியில் இருந்து தமிழன் விடுபடுகிறானோ அன்றைக்கு தான் நம் தமிழ்நாடு ஒற்றுமையான நாடாக மாறும். மக்களே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் சாதி என்பது நமது கலாச்சாரம் அல்ல.இந்த மாற்றத்தை அரசியல்வாதிகள் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்த்தால் அது நம் முட்டாள்தனம் ஏனென்றால் இப்பிரிவினை தான் அவர்களின் வளர்ச்சிக்கான சொத்து. தமிழ் பழமையான மொழி தான் அதில் மாற்றுக்கருத்தே கிடையாது ஆனால் மற்ற மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் மதிக்கவும்வேண்டும். இன்று உலகமையமாக்குதலின் விளைவாக வேலைவாய்ப்பு என்பது ஒரு சமுத்திரம் போல இவ்வுலகம் முழுவதும் பரவி கிடக்கின்றது ஆகையால் தமிழை நேசிப்போம் மற்ற மொழிகளையும் ஆதரித்து கற்றுக்கொள்ளவோம். தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும், இதை இளைஞர்களாகிய நாம் பபுரிந்துகொண்டு தமிழை தமிழகத்தை தமிழனை வளர்ச்சி பாதையில் வழிநடத்துவோம்.
No comments:
Post a Comment